Connect with us

உலகம்

குடியரசு தினத்தில் வன்முறை.. தாய் நாட்டிற்கு ஆதரவு.. கனடாவில் இந்தியர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி

Published

on

வான்கூவர்: குடியரசு தினத்தன்று இந்தியாவில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதற்கிடையே கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் தலைநகரை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது ஒருசில விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அப்போது சிலர் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அப்போது டெல்லி போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு டெல்லியில் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாத வண்ணம் தற்காலிக சிமெண்ட் வெளிகளும் கூர்மையான ஆயுதங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து சர்வதேச பிரபலங்களும் இப்போது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க தொடங்கியுள்ளதால் இந்த போராட்டம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தான் குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை கொடுக்கும் விதமாகவும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சர்ரேயில் உள்ள ஸ்ட்ராபெரி மலையிலிருந்து இந்தியத் துணைத் தூதரகம் வரை வான்கூவரில் இந்த யாத்திரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் இந்தியா மற்றும் கனடா நாடு கொடியுடன் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரும் மக்கள் கூட்டத்தை தவிர, சுமார் 350 கார்கள் யாத்திரையில் பங்கேற்றன.

வந்தே மாதரம், ஜெய் ஜவான் மற்றும் ஜெய் கிசான், பாரத் மாதா கி ஜெய், எங்கள் மூவர்ணத்தை யாரும் அவமதிக்க விடமாட்டோம் போன்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் அப்போது எழுப்பினர். கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கான தேசபக்தியைக் காண்பிப்பதற்காக சமீப காலங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது பேரணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா4 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்4 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
rynek suplementów diety w polsce. Hvad er pablo escobar | escape room hos riddlehouse ?. S : İstanbul deniz otobüsleri sefer saatlerinde indirim veya kampanyalar mevcut mu ?.