கிரிக்கெட்
நைட் கிளப்பில் உல்லாசமாக இருந்த சுரேஷ் ரெய்னா… திடீர் ரெய்டில் சிக்கியதால் பரபரப்பு!

மும்பையில் உள்ள டிராகன்ஃபிளை என்னும் நைட் கிளப்பில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா விதிகளை மீறி நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர் மீது காவல் துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
டிராகன்ஃபிளை கிளப்புக்கு இன்று திடீர் ரெய்டுக்கு சென்ற மும்பை போலீஸ், விதிகளை மீறி அதிகாலை 3 மணி வரை பலர் உல்லாசமாக இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து 34 பேர் மீது நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது மும்பை போலீஸ். இந்த 34 பேரில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர் ஆவார்.
ரெய்னா, படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கபதற்காக மும்பை வந்துள்ளார். பின்னர் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் நைட் கிளப்புக்கு சென்றுள்ளார் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பற்றி ரெய்னா தரப்பு, ‘மும்பையில் உள்ள விதிமுறைகள் என்னவென்று தெரியாமல் சுரேஷ் ரெய்னா இப்படி நடந்து கொண்டார். அவர் சட்டங்களையும் விதிகளையும் மதித்து நடக்கக்கூடிய நபர். இந்த சம்பவத்திற்காக அவர் மிகவும் வருந்துகிறார்’ என்று கூறியுள்ளது.













