இந்தியா
உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து நமது உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதோடு பிற நாடுகளுக்கும் பெட்ரோல் டீசலை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த சூழலில் உக்ரைன் போர் காரணமாக உக்ரைன் தாக்குதல் நடத்தியதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கிடங்குகள் உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தி கட்டமைப்புகள் கடுமையான சேதமடைந்திருப்பதால் கடுமையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக இந்திய பெட்ரோலை அதிக அளவில் ரஷ்ய அரசு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக 60000 மெட்ரிக் டன் பெட்ரோல் கடல் வழியாக ரஷ்யாவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. உள்நாட்டின் எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து மாதந்தோறும் 4 லட்சம் டன் பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.இதற்காக ரஷ்யா வரிச்சட்டங்களில் தேவைப்படும் சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.













