இந்தியா
கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் வினாத்தாள் கசிந்த புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. தேர்வுக்கான மாற்றுத் தேதி குறித்து அரசின் ஆலோசனைகளுக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள் மே 1 ம் தேதியே ராஜஸ்தானிலிருந்து கசிந்தது.











