Connect with us

ஆன்மீகம்

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Published

on

நாம் நம்மைச் சுற்றி அன்றாடம் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வு என்னவென்றால் ஏதாவது ஒரு அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தையோ ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் இரவோடு இரவாக அந்த இடத்தில் ஒரு கோயிலை உருவாக்குவது அல்லது சில கட்டுக்தைகளை வதந்திகளாக பரப்பி அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை படிப்படியாக ஆக்கிரமித்துக் கொள்வது ஆகும். பின்னாளில் அரசு அந்த இடத்தை எடுத்துக்கொள்ள சட்டப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் மறியல் என்று போராட்டங்கள் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இவையெல்லாம் சரியா? என்பது குறித்த விவாதங்களின் விளைவே உங்களுக்கு இந்த வழக்கின் மூலமாக கிடைத்திருக்கிறது.

அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பொதுப் பாதைகள் என்பவை யாருடைய தனிச்சொத்தும் அல்ல. அவற்றை மதம், வழிபாடு, பழக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் முக்கியமான தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வழக்கு விவரம்

வழக்கு எண்: W.P.(MD) No.2646 of 2026

தீர்ப்பு நாள்: 06.02.2026

நீதிமன்றம்: Madurai Bench of Madras High Court

தீர்ப்பின் மையக் கருத்து

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டிருந்தாலும், அதற்கு நீதிமன்ற பாதுகாப்பு கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுப் பாதையை மறித்து, அல்லது நீர்நிலையின் கரைப்பகுதி போன்ற இடங்களில் கட்டப்பட்ட வழிபாட்டு அமைப்புகள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் கூறிய முக்கிய அம்சங்கள்

அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை.

நீர்நிலைக் கரை மற்றும் பொதுப் பாதையை மறிக்கும் கட்டிடங்கள் அகற்றப்படலாம்.

மின்சாரம் இணைப்பு அல்லது வரி மதிப்பீடு இருந்தாலே உரிமை உருவாகாது.

Places of Worship (Special Provisions) Act, 1991 என்ற சட்டம், அரசு நில ஆக்கிரமிப்பை காப்பாற்றுவதற்காக அல்ல. அது 15.08.1947 அன்று இருந்த மத வழிபாட்டு இடங்களின் மத அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே இயற்றப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றம் பரிசீலித்த சட்டங்கள்

  1. Tamil Nadu Local Bodies Act, 1998 – Section 128

பொதுநில ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

  1. Places of Worship (Special Provisions) Act, 1991

இந்தச் சட்டம் அரசு நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாது என்று நீதிமன்றம் கூறியது.

  1. இந்திய அரசியலமைப்பு – Articles 14, 25, 26, 300-A

இந்த பிரிவுகள் முன்வைக்கப்பட்டாலும், மதச்சார்பு சுதந்திரம் என்பது அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் உரிமை அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

  1. O.(Ms) No.205, Revenue & Disaster Management Dept., dated 26.04.2025

இந்த அரசாணை வசிப்பிட residential encroachment-ஆக்கிரமிப்புகளை சில சூழல்களில் regularise செய்வதற்கானது; அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோயில் போன்ற non-residential religious encroachment-களுக்கு இது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பின் சட்டப் பார்வை

மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால், அந்த உரிமையின் பெயரில்: அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது நீர்நிலையை மறிக்க முடியாது பொதுமக்கள் பயன் பெறும் பாதையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது என்பதையே இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.

இந்த தீர்ப்பு ஏன் முக்கியம்?

தமிழ்நாட்டில் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வலுவான முன்னுதாரணம்

“மதம்” என்ற பெயரில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளுக்கு தெளிவான எச்சரிக்கை

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையை மீண்டும் நினைவூட்டும்

தீர்ப்பு சுருக்கமாக

மதச்சார்பு சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டது. அரசு நிலம் பொதுமக்களின் சொத்து.

அதை எந்த பெயரிலும் ஆக்கிரமிக்க முடியாது. கோயில் என்ற பெயர் வைத்தாலும், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக்கு சட்டம் பாதுகாப்பளிக்காது.

எந்த மதக் கோயிலாக இருந்தலும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுதான் என்பதை இந்த தீர்ப்பு நிலை நாட்டியுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized5 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized3 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா1 நாள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

Translate »