இந்தியா
இந்தியாவில் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது? 250 மில்லியன் பேரல் இருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

உலகளவில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் சிலரிடம் உருவாகியுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் இதுபற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளது.
அரசாங்க தகவலின்படி, இந்தியாவில் தற்போது 250 மில்லியன் பேரல்களுக்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளது. இந்த அளவு எண்ணெய் இருப்பு நாட்டின் தேவைக்கு சுமார் 7 முதல் 8 வாரங்கள் வரை போதுமான அளவு பாதுகாப்பு இருப்பாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 258 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) ஆக உள்ளது. இது நாட்டின் உள்நாட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறுகிய காலத்தில் ஏற்படும் விநியோக சிக்கல்களை இந்தியா சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது.
அதோடு, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் பங்குகளில் எந்த விதமான பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக எரிபொருள் விலைகளும் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் தற்காலிக சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்தியாவில் உடனடி எரிபொருள் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.



















