பங்கு சந்தை
சந்தை மதிப்பு வீழ்ச்சியால் கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள்
சந்தை மதிப்பு வீழ்ச்சியால் கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள்
கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சந்தை பொருளாதார வீழ்ச்சி ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கடந்த 5 நாள்களில் ரு.44,935 கோடி க்கு மேல் பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியும் ரு.70,479 கோடிக்கு மேல் நஷடத்தை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்திருப்பதாகவும் செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன.
பங்கு சந்தை தரவுகளின்படி ஸ்டேட் வங்கியின் சந்தை முதலீடு ரு.6,63,233 கோடியாகவும்
எச்டிஎப்
சி வங்கியின் சந்தை முதலீடு ரு.12,67,440 கோடியாகவும் சரிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்கள், ஐசிஐசி வங்கி, ஐடிசி நிறுவனம் ஆகியனவும் சந்தையில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனங்கள் அணைத்தும் சேர்த்து ரு.1,85,952 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இந்திய முதலீட்டாளர்களுக்கு போதாத காலம்
ரிலையன்ஸ் நிறுவனங்கள், ஸ்டேட் வங்கி,, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் நிநுவனம், ஐடிசி மற்றும் எச்சிஎல் நிறுவனங்களின் பங்குகள் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் மும்பை பங்கு சந்தை குறியீடு 1,844.2 புள்ளிகளாகவும் நிஃப்டி குறியீடு 573.25 புள்ளிகளாகவும் சரிந்தியுருப்பது இந்திய முதலீட்டாளர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 10 மிகப்பெரும் நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் மட்டும் மொத்தமாக ரு.1,85,952 கோடியை இழந்திருப்பது முதலீட்டாளர்களாலும் பங்கு சந்தை வல்லுநர்களாலும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர்
இந்த ருபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விலக்கிக் கொள்ள தொடங்கியிருப்பது இந்திய முதலீட்டாளர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.
நமது ஒன்றிய அரசும் செபி மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்களும் ஏதாவது முயற்சி செய்து நமது முதலீட்டாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அது மட்டும் நடக்காவிட்டால் சமீபத்தில் நமது அண்டை நாடான இலங்கையில் நடைபெற்றது போன்ற மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சிளயினை நாடு எதிர்நோக்க வேண்டி வரும் என்ற அச்சம் அணைவரின் கண்களிலும் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அதனை இந்தியா தாங்காது. சாமானிய பொது மக்களின் சேமிப்புகளும் முத்த குடிமக்களின் சேமிப்புகளுக்கும் பாதுகாப்பு உறுதிப் படுத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அணைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


















