வணிகம்
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பிட்மெண்ட் காரணி குறித்த முழுமையான தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் அமல்படுத்தல் குறித்த எதிர்பார்ப்பு தினத்துக்கு தினம் அதிகரித்து வருகிறது. 7வது ஊதியக் குழுவின் காலகட்டம் முடிவடைவதற்கு முன்பே, புதிய சம்பள கட்டமைப்பு மற்றும் பிட்மெண்ட் காரணி குறித்து ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சில் செயலாளர் திரு. ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக் குழுவின் பிட்மெண்ட் காரணி குறைந்தபட்சம் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், 2025-26 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெ
ட்டில் 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஊழியர்கள் நம்புகின்றனர்.
பிட்மெண்ட் காரணி எப்படி இருக்கும்?
8வது ஊதியக் குழுவில் பிட்மெண்ட் காரணி 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து 186% உயர்ந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். அதேபோல், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000ல் இருந்து ரூ.25,740 ஆக உயர்வு காணும்.
மேலும், அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR), மற்றும் பிற நலன்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















