Connect with us

கிரிக்கெட்

ரோஹித் சர்மாவுக்கு பதில் யார்? தமிழக வீரர் துணை கேப்டனா?

Published

on

தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யார் என்பது குறித்தும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது என்பதும் டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தேர்வு பெற்று இருந்த ரோகித் சர்மா பயிற்சியின் போது திடீரென காயமடைந்தார். இதனை அடுத்து அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மா அணியில் இருந்து விலகி விட்டதை அடுத்து அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்ச்சல் என்பவர் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் பிரியங்க் பஞ்ச்சல் தலைமையில்தான் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சித் கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அல்லது அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்படலாம் என்றும் குறிப்பாக தமிழக வீரர் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த சீனியர் வீரர் என்பதாலும் அனுபவிக்க வீரர் என்பதாலும் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?