Connect with us

தமிழ்நாடு

விஜயகாந்த் மகனுக்கு திமிரு ஜாஸ்தி: முதல் அரசியல் பேச்சு!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார். அவரது முதல் அரசியல் மேடை பேச்சு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரங்கேறியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர் மிகவும் தில்லாக பேசினார்.

தேமுதிகவின் 14-வது ஆண்டுவிழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதன்முதலாக விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசப்போகிறார் என்றதும் கூட்டத்தினரிடையே ஒரு ஆர்வம் இருந்தது.

இதில் அவர் விஜயகாந்த் போலவே ரொம்ப இயல்பாகவே பேசினார். தன்னுடைய முந்தையகால நிகழ்வுகள் குறித்து பேசிய விஜய பிரபாகரன், எனக்கு பிடிச்சதையெல்லாம் செய்யறதுக்கு அனுமதி கொடுத்தது அப்பா, அம்மாதான். தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப எனக்கு பிடிச்ச இடத்தில்தான் வந்து நிற்கிறேன். இரண்டு தொழில் எடுத்தேன். வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். பார்க்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு பிரபாகரன் என்று அப்பா பெயர் வைத்தார். எல்லோரும் சொல்லுவார்கள் இலங்கை பிரபாகரனை நினைத்துதான் அப்பா பெயர் வைத்தார் என்று. அந்த பெயரை காப்பாற்றுவேன் என்று சத்தியம் செய்கிறேன் என்றார்.

நான் ஒரு இளைஞனாக தனியாக எதுவும் செய்ய முடியாது. என் கூட பல லட்சம் இளைஞர்கள் வரவேண்டும். என்னை நீங்க விஜயகாந்த் பையனா பாக்காதீங்க. உங்க ப்ரண்டா பாருங்க. ஹாய் ப்ரோ, என்ன மச்சான், என்ன மாமா என்ற அந்த லெவலில் பாருங்க. சேர்ந்து கைகொடுங்கள். கண்டிப்பாக சாதிப்போம். எனக்கு திமிரு ஜாஸ்தி. ஆணவ திமிரு இல்ல, திரும்பவும் சொல்கிறேன். தேமுதிக அடுத்த முறை ஆட்சியை அமைக்கும். ஏனென்றால் இங்கு வரவேற்பு அப்படி, கூட்டம் அப்படி, பிரபாகனாக உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்வேன்.

இறுதியாக தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். நமது முரசு, நாளை அரசு. விடைபெறுகிறேன், வணக்கம் என கூறி முடித்தார் விஜய பிரபாகரன்.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?