ஆன்மீகம்
அக்டோபர் 09, 2025 சுக்கிரன் பெயர்ச்சி – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாயில்கள் திறக்கப்படுகின்றன!

ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றன. இந்த கிரகச் சஞ்சாரம், ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும். அதன்படி, அக்டோபர் 09, 2025 அன்று காலை 10:38 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறுகிறது.
சுக்கிரன், அன்பு, அழகு, பணம் மற்றும் அழகியல் போன்ற துறைகளின் அதிபதியாக இருக்கிறார். ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால், சுக்கிரன் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தருகிறார். இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் பெரிய நன்மைகளை தரப்போகிறது.
மிதுனம் ராசி:
மிதுன ராசிக்காரர்களின் நான்காவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் நடக்கிறது. இதனால் அவர்கள் வணிகத்தில் வெற்றி, பெரிய ஒப்பந்தங்கள், முதலீட்டு வருமானம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரம் செலவிட முடியும். வேலை தேடுபவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை அடையலாம்.
சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்களின் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைகிறான். இதனால் தொழில் முன்னேற்றம், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சி அதிகரிக்கும். கலை, இசை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் செல்வம் மற்றும் புகழ் பெறுவார்கள்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் நடைபெறுகிறது. இதனால் அதிர்ஷ்டக்கதவுகள் திறக்கப்படுகின்றன, வெளிநாட்டு பயணங்கள், பணியில் புதிய பொறுப்புகள், நீண்டகால திட்டங்களில் வெற்றி போன்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் குடும்ப உறவுகள் வலுப்படும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
















