தமிழ்நாடு
3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் ரெட்-அலர்ட் எச்சரிக்கை மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலும் விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.