உலகம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டதா.. பரபரப்பு தகவல்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது.அதே சமயம் இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அரசு அளித்த சேட்டிலைட் போன்களை பயன்படுத்தும்படி டிரம்ப் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதாவது அலுவலக பயன்பாட்டிற்கும் அவர் தனது சொந்த ஐபோனை மட்டுமே பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை குறித்து அமெரிக்க பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக கட்டுரை எழுதியுள்ளது.