ஜோதிடம்
யப்பா டேய்..வாங்குன பணத்தை திருப்பிக் கொடுடா.. என்று கேட்பவரா நீங்கள்..

இப்பொழுதெல்லாம் நம்ம கிட்ட பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்த நாம் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். நாமும் பரிதாபப்பட்டு கொடுத்து விடுவோம். ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வடிவேலு பட ஜோக் மாதிரி பணத்தை எப்படா திருப்பித் தருவே? என்று கேட்டால் பணம் வரும்போது திருப்பித் தருவேன் என்பார்கள். எப்படா வரும் என்று கேட்டால் உனக்கு கொடுக்கும்போது வரும் என்பார்கள்.
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப ராமாயணத்தில் கம்பர் கூறியிருப்பார். ஏனென்றால் கடன் வாங்குவது அவ்வளவு கொடுமையாகக் கருதப்பட்ட காலம் அது. ஆனால் இப்போது கம்பன் இருந்தால் கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்றுதான் பாடியிருப்பான். கொடுத்த கடனை வாங்குவது அவ்வளவு பெரும்பாடாக இருக்கிறது. அதிலும் சில பேர் கந்து வட்டி கேட்கிறான் என்று காவல் நிலையத்தில் நம் மீதே புகாரும் கொடுத்து விடுவார்கள். இன்னும் சில பேர் கடன் கொடுத்தவன் பேரை சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்கள்.
இப்படி பணத்தை மற்றவர்களிடத்தில் கொடுத்து ஏமாந்து நிற்பவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப பெற என்ன செய்வது என்பதே பெரிய மண்டைக் குடைச்சலாக போகிறது பல நேரங்களில்.
இப்படிப்பட்ட நபர்கள் ஆண்டவன் மேல் பாரத்தை இறக்கி வைத்து செய்ய வேண்டிய எளிய பரிகார முறை என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாமா… இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் வேண்டும் சுத்தமான தயிர் கருப்பு உளுந்து அனைத்தும் தேவைப்படும். வெள்ளிக்கிழமை இரவு பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் கருப்பு உளுந்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தயிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை குளித்து முடித்த பிறகு ஊற வைத்துள்ள கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர் பகுதியில் கொட்ட வேண்டும். பரிகாரத்தை செய்ய தொடங்கியதிலிருந்து பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முதலில் அமாவாசை அன்றுதான் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தொடங்கி அதன் பிறகு வரக்கூடிய 8 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை விடாமல் செய்ய வேண்டும். அரச மரத்தில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. சனிக்கிழமை அன்று பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சனிக்கிழமையில் இந்த அரச மர பரிகாரம் செய்வது மிகவும் நல்லது என கருதப்படுகிறது. பணம் வாங்கியவர்கள் திரும்பி தரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட அதை திருப்பி தருவதற்கான சூழ்நிலையை இந்த பரிகாரம் அமைத்து தரும். ஆகையால் பணத்தை கொடுத்து விட்டு திரும்ப பெறுவதற்கு சிரமமாக இருந்தால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து அதற்கான பலனை பெற்றுக் கொள்ளுங்கள் அத்தோடு இனிமேல் இது போல பணத்தை கொடுத்து விட்டு பரிதவிக்காமல் இருக்க ஒன்றுக்கு பலமுறை யோசனை செய்து அதற்கு ஜவாப்தாரியாக அதாவது அடமானமாக வேறு ஏதாவது பொருளோ தங்கமோ நிலப் பத்திரமோ டபெற்றுக் கொண்டு கடன் கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஊரில் நீங்கள் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி அதற்கு தலைவராக வேண்டியும் வரலாம்.
















