வணிகம்
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன் – யார் யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இங்கே

தமிழ்நாடு அரசு, கைவினைத் தொழிலில் ஈடுபடும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தயாரிக்கும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் சிறப்பு கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. “விராசத் கைவினை கலைஞர்கள் கடன் திட்டம்” எனப்படும் இந்த திட்டம், கைவினை கலாச்சாரத்தை பாதுகாத்து, உலகளவில் தமிழ்நாட்டின் அடையாளத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனின் மூலம், கைவினைப் பொருட்கள் தயாரிக்க தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் வாங்குவதோடு தொழிலை விரிவுபடுத்தவும் பயன்படலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
பாரம்பரிய கைவினை கலைஞர்கள்
மட்பாண்டம் செய்பவர்கள்
நெசவாளர்கள்
தச்சர்கள் மற்றும் பிற கைவினைத் தொழிலில் ஈடுபடுபவர்கள்
👉 விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
👉 ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற தகுதி பெறுவார்.
கடன் திட்ட வகைகள்
திட்டம் – 1
ஆண்டு வருமானம்: ரூ.3,00,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்
அதிகபட்ச கடன் தொகை: ரூ.10,00,000
வட்டி விகிதம்: ஆண்டு 4%
தவணைக் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
திட்டம் – 2
ஆண்டு வருமானம்: ரூ.8,00,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்
அதிகபட்ச கடன் தொகை: ரூ.10,00,000
வட்டி விகிதம்: ஆண்டு 6%
தவணைக் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பப் படிவம்
சாதி சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ்
ஆதார் அட்டை
தொழில் திட்ட அறிக்கை
வங்கிக் கணக்கு விவரங்கள்
விண்ணப்பிக்கும் முறை
கடன் பெற விரும்புபவர்கள், தங்களது மாவட்ட கைத்தொழில் அலுவலகம், மாவட்ட கைவினைஞர் நலச்சங்கம் அல்லது வட்டார கைத்தொழில் அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களையும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறையையும் வழிகாட்டுவார்கள்.

















