ஆன்மீகம்
சுக்கிரன் வக்ர நிவர்த்தி உருவாக்கிய இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் பொற்காலம்!

சுக்கிரன் வக்ர நிவர்த்தி தரும் இரட்டை ராஜயோகம் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!
ஏப்ரல் 13-ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்ததைத் தொடர்ந்து, இரு முக்கியமான ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அவை மாளவ்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த இரண்டு யோகங்களும் செல்வம், சௌக்கியம், உயர்வு, ஆதாயம் போன்ற பல நன்மைகளை வழங்கும் சக்தி வாய்ந்தவை.
இந்த யோகங்கள் 12 ராசிகளிலும் சிறு சிறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், பின்வரும் 5 ராசிகளுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிர்ஷ்ட ராசிகள்:
1. ரிஷபம்
சுக்கிரன் பெயர்ச்சி ரிஷபருக்கு சொர்க்கம் போல இருக்கும். பொருளாதார நிலை மொத்தமாக உயரும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை காத்திருக்கின்றன.
2. கடகம்
மாளவ்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகத்தின் தாக்கம் கடகர்களுக்கு பல நன்மைகளை தரும். அலுவலகம், வணிகம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிதி நிலை மேம்படும்.
3. துலாம்
துலாம்ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால், இவர்களுக்குப் பலத்த ஆதரவு. சமூக மதிப்பு, குடும்ப பாசம், திருமண உறவின் நெருக்கம் ஆகியவை அதிகரிக்கும். பயணங்களில் இருந்தும் நன்மை கிடைக்கும்.
4. விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் நிதி வளம், புதிய வருமானம், தொழில் வளர்ச்சி என பல நல்ல விசயங்களை கொண்டுவரும். குடும்ப அமைதி, உறவுப் பலம் ஆகியவை வலுப்படும்.
5. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள், தொழிலில் புதிய வாய்ப்புகள், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி சிக்கல்கள் தீரும். திருமண உறவுகள் வலுப்படும். அதிர்ஷ்டமும் முழுமையாக பக்கபலமாக இருக்கும்.
சுக்கிரன் அருளைப் பெற இது செய்யுங்கள்:
வழிபாட்டில் ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லுவது நல்ல பலன்களை தரும்.
















