Connect with us

தமிழ்நாடு

தோல்வி மேல் தோல்வி.. தனித்துவிடப்பட்ட ஓ பன்னீர்செல்வம்.. இன்னும் 6 மாசத்தில் கேம் ஓவராமே!

Published

on

சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார். பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.

#image_title

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் ஈரோட்டில் எடப்பாடி டீமில் சேர்ந்து உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணியில் சேர்ந்துவிட்டனர். இதெல்லாம் போக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்துவிட்டார்.

இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு தொட்டதெல்லாம் தோல்வி என்று நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் பலர் ஓ பன்னீர்செல்வத்தை விட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு சப்போர்ட் இல்லை. அவருக்கு ஆதரவாக எதுவும் நடப்பது இல்லை. அவருடன் இருந்தால் நமக்கு எதிர்காலம் போச்சு.

எடப்பாடி தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார். அவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார். ஒன்று எடப்பாடியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் திமுக பக்கம் செல்ல வேண்டும். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பது இனியும் தங்களுக்குப் பலன் கொடுக்காது என்று நிர்வாகிகள் நினைக்க தொடங்கிவிட்டனராம்.

இதனால் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகும் என்கிறார்கள். அடுத்த 6 மாதங்களுக்குள் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவர்களாக அவரின் கூடத்திலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் டாப் தலைகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?