ஆன்மீகம்
செப்டம்பர் 16 – 30 ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய 2 வாரம்!

ஜோதிடர்கள் கணிப்பின்படி, செப்டம்பர் 16 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகக் கூறப்பட்டுள்ளது.
கடகம் (Cancer)
பொறுமை அவசியமான காலம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவுடன் நடக்கக் கூடாது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனையை மதிக்க வேண்டும். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாற்றங்கள் வந்தாலும் சச்சரவின்றி ஏற்கவும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் தொடங்கும். வீண் வன்மம் வேண்டாம். தொழிலில் முழு ஈடுபாடு தேவை. புதிய முதலீடுகளை நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலை விலக்க வேண்டும். ஆரோக்கியத்தில் ஜீரண கோளாறு, அல்சர் பிரச்னை வரலாம். மாருதியை வழிபாடு நன்மை தரும்.
கன்னி (Virgo)
சினம் தவிர்க்கப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டு உண்டு. பொறுப்புகளில் கவனம் மிக முக்கியம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழந்தைகளின் வாழ்க்கையில் தடைகள் நீங்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வரவு சீராக இருக்கும். சொத்து வழக்குகளில் விட்டுக்கொடுத்தல் நல்லது. தொழிலில் நிலைத்தன்மை காணலாம். மாணவர்கள் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இரவு பயணங்களில் அவதானம் அவசியம். ரத்த அழுத்தம், மரபு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம் (Leo)
முயற்சியால் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. துணிவைவிட பணிவு முக்கியம். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். சுப நிகழ்வுகளில் வீண் ஆடம்பரம் தவிர்க்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கவும். தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தில் நேர்மையுடன் செயல்படுங்கள். மாணவர்கள் கவனமாகப் பழக வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி, ரத்த பிரச்னை வரலாம். பைரவரை வழிபாடு நன்மை தரும்.













