செய்திகள்
ரேஷன் கார்டு: தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி பொருட்கள் வர விண்ணப்பிக்கும் முறைகள்!

ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு அரசின் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஆம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இதுவரை கள ஆய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது புதிய பயனாளிகளும் இந்த சேவைக்காக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விரும்பும் பொதுமக்கள், மாதந்தோறும் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களில் (பொது விநியோகத் திட்ட முகாம்) விண்ணப்பிக்கலாம்.
முகாம்களில் செய்யப்படும் சேவைகள்
மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்
பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல் / நீக்கல்
கைபேசி எண் மாற்றம்
புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல்
குடும்பத் தலைவரின் புகைப்பட திருத்தம் / பதிவேற்றம்
பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளை தீர்த்தல்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து மனுக்கள் பெறுதல்
சிறப்பு நன்மைகள்
நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு குறித்த குறைகள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் தங்கள் குறைகளை இந்த சிறப்பு குறைதீர் முகாம்களில் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.



















