இந்தியா
மொபைல் போன் கூட இல்லை, 2bhk வீட்டில் எளிய வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர்!
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் சகோதரர் இரண்டு படுக்கை அறை கொண்ட எளிய வீட்டில் மொபைல் போன் கூட இல்லாமல் வாழ்ந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா என்பதும் அவரது சொத்து மதிப்பு பல கோடிகள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய இளைய சகோதரர் ஜிம்மி டாடா என்பவர் தற்போது மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவரது கையில் மொபைல் போன் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜிம்மி டாடாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரத்தன் டாடா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ’சிறுவயதில் எங்களுக்குள் எந்த விதமான சண்டையும் வந்ததே இல்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1945 ஆம் ஆண்டு கிளிக் செய்யப்பட்ட இந்த கருப்பு வெள்ளை புகைப்படம் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரத்தன் டாடா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றவராக இருக்கும் நிலையில் ஜிம்மி டாட்டா குறித்து வெகு சிலருக்கு தெரிந்திருப்பது தான் பெரும் ஆச்சரியம். டாடா சன்ஸ் உள்பட ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருந்தாலும் அவருக்கு தொழில் மீது ஆர்வம் இல்லை என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் என்றும் கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள புறநகரில் அவர் இரண்டு படுக்கையறை கொண்டு கொண்ட வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் 83 வயது ஆன அவரிடம் மொபைல் போன் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
கலந்த 2020 ஆம் ஆண்டு தான் ஜிம்மி டாடா குறித்த புகைப்படமே வெளியானது என்றும் அவருடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஜிம்மி டாடாவின் புகைப்படத்தை வெளியிட்டார் என்றும் அதன் பிறகு தான் அவர் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது உலகத்திற்கு தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி டாட்டா வணிகத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்கள் மற்றும் டாடா பவர் ஆகியவற்றில் பங்குதாரராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.