வணிகம்
ஒசூரில் புதிய தொழிற்சாலை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஓலா!
ஒசூர்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது எதிர்கால தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான திட்டத்தை இறுதி செய்துள்ளது.
ஓலா நிறுவனம் அதன் உற்பத்தித்திறனை ஆண்டுக்கு 1 மில்லியன் வாகனங்களிலிருந்து ஆண்டுக்கு 4 மில்லியனாக நான்கு மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஓசூரில் 5 Gwh சேமிப்பு திறன் கொண்ட கெமிஸ்ட்ரி செல் பேட்டரி தொழிற்சாலையையும் ஓலா உருவாக்க உள்ளது.
இரு சக்கர வாகனம் மட்டுமல்லாமல், 2024-ம் ஆண்டு முதல் மின்சார கார் உற்பத்தியும் ஓலா நிறுவனம் செய்ய உள்ளது.
டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் 100 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோ ரூம்களையும் ஓலா நிறுவனம் தொடங்க உள்ளது.