செய்திகள்
ஒரு வடைக்காக உயிர் போச்சு!.. ஹோட்டல் அதிபர் குத்திக்கொலை..
தற்போதெல்லாம் கொலைகள் மிகவும் சாதரணமாக நிகழ்ந்து விடுகிறது. மதுரையில் ஒரு வடை அதிகமாக சாப்பிட்டதாக கூறி பில் போட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புதூர் ஐடி அருகே முத்து உணவகம் என்கிற ஹோட்டல் உள்ளது. இந்த கடையை முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார். அதே பகுதியில் விறகு வெட்டும் தொழில் செய்து வரும் கண்ணன் என்பவர் இந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணன் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும், ஹோட்டல் அதிபர் முத்துக்குமாரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கண்னன் 5 இட்லியும், ஒரு வடையும் சாப்பிட்டதாக கூறிய நிலையில், முத்துக்குமாரோ 2 வடைக்கு பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து கைகலப்பில் முடிந்தது. அப்போது, கண்ணன் தன்னிடமிருந்த அரிவாளால் முத்துக்காரின் கையை துண்டித்ததோடு, மார்பிலும் குத்தியுள்ளார். இதனால், முத்துக்குமார் அங்கேயே உயிரிழந்தார்.
அதன்பின் கண்ணன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.