செய்திகள்
ஒரு கிலோ ரூ.3 லட்சம் விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழம் – இந்தியாவில் இந்த ஊரில் மட்டும் விளைகிறது!

விலையிலேயே வியக்க வைக்கும் மாம்பழம்!
முக்கனிகளில் முதன்மையான மாம்பழம், ‘பழங்களின் மன்னன்’ என அழைக்கப்படும் இது கோடைக்கால சிறப்புப் பழமாகும். இந்தியாவில் மட்டுமே 1,500-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஆனால், பீகார் மாநிலத்தில் மட்டும் விளையும் மியாசாகி மாம்பழம், அதன் விலை மற்றும் தனித்துவத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மியாசாகி மாம்பழம் எங்கே விளைகிறது?
பாட்னா மாவட்டத்தின் மசௌர்ஹி தொகுதியில் உள்ள கோரியவன் கிராமம் தான் இந்தியாவில் மியாசாகி மாம்பழம் வளர்க்கப்படும் ஒரே இடமாக இருக்கிறது. முதலில் ஜப்பானில் தோன்றிய இந்த மாம்பழ வகை, தற்போது பீகாரில் பருவநிலை கட்டுப்பாடுகளுடன் பராமரிக்கப்பட்டு பயிரிடப்படுகிறது.
விலை ஏன் இவ்வளவு அதிகம்?
இது சூரியனின் முட்டை (Egg of the Sun) என அழைக்கப்படுகிறது. மிக இனிமையான சுவை, நாரின்றி உள்ள மென்மையான கட்டமைப்பு மற்றும் வசீகரமான சிவப்பு நிறம் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்கள். ஒவ்வொரு பழமும் சுமார் 350 முதல் 550 கிராம் வரை எடையுள்ளவை.
விவசாயிகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த பழங்கள் அதிக மதிப்புடையதால், திருட்டு மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்குவதற்காக பழத்தோட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், செடிகள் பெங்களூருவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன, ஒவ்வொன்றும் ரூ.500 வரை விலை உள்ளது.
முக்யமா ஏன் இதை வளர்க்கிறார்கள்?
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமாக விளங்கும் மியாசாகி, விவசாய வருமானத்தை உயர்த்தும் புதிய வாய்ப்பாக பீகார் விவசாயிகளால் ஏற்கப்படுகிறது. அதிக சுகாதார குணங்கள் கொண்ட இது, இனிமையும், மணமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

















