வணிகம்
நவம்பர் 3 முதல் யுபிஐ விதிகளில் பெரிய மாற்றம் – கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) நவம்பர் 3, 2025 முதல் புதிய யுபிஐ (UPI) விதிகளை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பிரபல யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் முறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.
முன்னதாக, ஒரு நாளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 10 செட்டில்மெண்ட் சைக்கிள்களில் (Settlement Cycles) செய்யப்பட்டு வந்தன. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட (Authorised) பரிவர்த்தனைகளும், பிரச்சனை (Dispute) ஏற்பட்ட பரிவர்த்தனைகளும் ஒரே நேர கட்டமைப்பில் நடந்தன. ஆனால், இனிமேல் இது தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளது.
புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 10 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளுக்கு (பண ரிவர்ஸ்/ரீபண்ட்) 2 தனி சைக்கிள்கள் அமலுக்கு வருகின்றன. இதனால் மொத்தம் 12 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் செயல்படும்.
புதிய நேர கட்டமைப்பு பின்வருமாறு உள்ளது:
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை — அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (10 சைக்கிள்கள்)
நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை — முதல் டிஸ்ப்யூட் பரிவர்த்தனை சைக்கிள்
மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை — இரண்டாவது டிஸ்ப்யூட் பரிவர்த்தனை சைக்கிள்
இவை தவிர, ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை சைக்கிளுக்கும் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது:
1️⃣ காலை 9 மணி – நள்ளிரவு வரை
2️⃣ நள்ளிரவு – அதிகாலை 5 மணி
3️⃣ அதிகாலை 5 மணி – காலை 7 மணி
4️⃣ காலை 7 மணி – காலை 9 மணி
5️⃣ காலை 9 மணி – காலை 11 மணி
6️⃣ காலை 11 மணி – பிற்பகல் 1 மணி
7️⃣ பிற்பகல் 1 மணி – பிற்பகல் 3 மணி
8️⃣ பிற்பகல் 3 மணி – மாலை 5 மணி
9️⃣ மாலை 5 மணி – இரவு 7 மணி
🔟 இரவு 7 மணி – இரவு 9 மணி
இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்ட பின், யுபிஐ மூலம் பணம் அனுப்பும் அல்லது பெறும் நேரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு விரைவாக அமையும் என NPCI தெரிவித்துள்ளது. இதனால், பண ரீபண்ட் மற்றும் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் நேரம் மேலும் துல்லியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














