Connect with us

தமிழ்நாடு

கிருத்திகாவுக்கு ஜாமீன்: மதனின் ஜாமீன் மனு என்ன ஆச்சு?

Published

on

யூடியூபில் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்தது, சிறுவர் சிறுமிகளுக்கு பப்ஜி விளையாட்டை சொல்லி கொடுப்பது போல் அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவருடைய யூடியூப் சேனலின் நிர்வாகி அவருடைய மனைவி கிருத்திகா என்பதால் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதன் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதனை ஜாமீனில் விட்டால் அவர் வழக்கின் நிலையை மாற்றும் தன்மை உடையவர் என்றும் அதனால் அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால் அதே நேரத்தில் கிருத்திகாவின் ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிருத்திகாவின் 8 மாத குழந்தையின் உடல் நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டது. மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?