தமிழ்நாடு
கிருத்திகாவுக்கு ஜாமீன்: மதனின் ஜாமீன் மனு என்ன ஆச்சு?
யூடியூபில் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்தது, சிறுவர் சிறுமிகளுக்கு பப்ஜி விளையாட்டை சொல்லி கொடுப்பது போல் அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவருடைய யூடியூப் சேனலின் நிர்வாகி அவருடைய மனைவி கிருத்திகா என்பதால் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதன் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதனை ஜாமீனில் விட்டால் அவர் வழக்கின் நிலையை மாற்றும் தன்மை உடையவர் என்றும் அதனால் அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
ஆனால் அதே நேரத்தில் கிருத்திகாவின் ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிருத்திகாவின் 8 மாத குழந்தையின் உடல் நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டது. மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.