தமிழ்நாடு
கமலுக்கு மூளையில் கோளாறு: சொல்வது அமைச்சர் செல்லூர் ராஜூ!
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த பகுதிகள்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் கஜா பாதித்த பகுதிகளில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உதவிகளை செய்து வருகிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல். இதனையடுத்து கமல், கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது அரசு. ஆனால் மூளையில் கோளாறு உள்ள கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரியாது. அவருக்கு டாக்டர்கள் வைத்து சீக்கிரம் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார் கோவத்துடன்.
மேலும் அமைசர் காமராஜ், நடிகர் கமல்ஹாசனுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது, தெரியாமல் பேசக்கூடாது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 573 வருவாய் கிராமங்களில் 464 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது கமல்ஹாசனுக்கு தெரியுமா? மக்கள்நலனைக் கருதும் யாரும் இந்த நேரத்தில் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். கமலுக்கு தினமும் ஒரு பேச்சு, தினமும் ஒரு செய்தி. அவருக்கெல்லாம் பதில்சொல்லி, நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.