வேலைவாய்ப்பு
IB ACIO ஆட்சேர்ப்பு 2025: 3,717 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு – தகுதி, வயது, தேர்வு முறை, சம்பளம் தகவல்கள்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
உள்துறை அமைச்சகத்தில் மத்திய புலனாய்வு துறை (IB) ACIO-2025 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு!
உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய புலனாய்வு துறையில் (IB) உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) Grade II / நிர்வாகி பதவிக்காக 3,717 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு அடிப்படை கணினி அறிவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது ஆகஸ்ட் 10, 2025 , 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
மொத்த காலி பணியிடங்கள்:
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 3,717 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் தேதி:
ஜூலை 19, 2025 முதல் விண்ணப்பிக்க www.mha.gov.in என்ற உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தலாம்.
சம்பள விவரம்:
தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
IB ACIO ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறை மூன்று நிலைகளில் நடைபெறும்:
முதல் நிலை: 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர Objective Type தேர்வு
இரண்டாம் நிலை: 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர Descriptive Type தேர்வு
மூன்றாம் நிலை: 100 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview)
இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புவோர், உரிய நேரத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்க தயாராக இருக்கலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















