Connect with us

இந்தியா

ஐசிஐசிஐ சாந்தா கோச்சார் ஜாமின் மனு.. மும்பை ஐகோர்ட் அளித்த உத்தரவால் சிபிஐ அதிர்ச்சி!

Published

on

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக சாந்தா கோச்சார் அவர்கள் இருந்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ 3250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் இந்த கடன் தொகை வீடியோகான் நிறுவனத்திடமிருந்து சாந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டன. இந்த நிலையில் தங்களது கைது சட்டப்படி இல்லை என்றும் தங்களிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து இருப்பதாகவும் எனவே தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஜாமின் வேண்டும் என்றும் சாந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த ஜாமீன் மனு மீதான வழகின் விசாரணை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவரது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு சிபிஐ அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகளீன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்13 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா18 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!