வணிகம்
ஐசிஐசிஐ வங்கி – வீடியோகான் கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சர் கணவர் கைது!

ஐசிஐசிஐ வங்கி – வீடியோகான் கடன் மோசடி வழக்கில், முன்னாள் ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகரி சந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சர், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
ஜூன் 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக 6 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சிபிஐ மற்றும் அமலாக்கு துறை விசாரணை செய்து வருகின்றன. அந்த 6 கடன்களின் மதிப்பு 1,875 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
கடனை பெற்ற வீடியோகான் நிறுவனம் அதில் பெரும் தொகையை அப்போதையை ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாக அதிகாரியாga இருந்த சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சரின் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த கடன்களை 2012-ம் ஆண்டு வாரா கடன்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் சந்தா கோச்சருக்கு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டு ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பதவி பறிபோனது. ஆனால் இந்த கடன் வழங்கப்பட்டதும், வாரா கடனாக மாற்றப்பட்டதும் எனது தனிப்பட்ட முடிவல்ல என்று சந்தா கோச்சர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குச் சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் முழு ஒத்துழைப்பு வழங்காததால், அமலாக்கத் துறை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன,

















