வணிகம்
EPFO வட்டி விகிதம் தொடரும்: 2024-25க்கும் 8.25% உறுதி – புதிய உறுப்பினர்களுக்கு ₹3,000 சிறப்பு தொகை!

மத்திய அரசின் EPFO வட்டி அறிவிப்பு: ஊழியர்களுக்கு 8.25% வட்டி தொடரும் – புதிய தகவல்!
சென்னை: ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கும் 8.25% வட்டி விகிதம் தொடரும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது நாட்டிலுள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு பெரும் நன்மையாக அமையும்.
237வது மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த வட்டி விகிதம் முன்மொழியப்பட்டது. தற்போது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், EPFO இந்த வட்டியை உரிய கணக்குகளில் வரவு வைக்கும் பணியை ஆரம்பிக்க உள்ளது.
வட்டி வரவு தாமதம் – ஏமாற்றத்தில் உறுப்பினர்கள்:
2023-24 நிதியாண்டுக்கான 8.25% வட்டி பிப்ரவரி 2024இல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 2025 முடியையிலும் பலரின் கணக்குகளில் அது வரவாகவில்லை. இது பல கோடி பிஎப் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் வட்டி வழங்கப்படுவது வழக்கம்.
முதல் முறையாக வேலைக்கு சேர்ந்தோருக்கு ₹3,000 வரவேற்பு தொகை:
2024 ஏப்ரல் மாதம் முதல் முறையாக EPFOவில் இணைந்த 12 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு, மத்திய அரசு தலா ₹3,000 அளவிலான தொகையை EPF கணக்கில் செலுத்தியுள்ளது. இது நேரடி வங்கி கணக்கில் அல்லாது, EPFO கணக்கிலேயே செலுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை தொழில் உற்பத்தித் துறையில் முதல்முறை பணியில் சேரும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ₹15,000 வரை சம்பளமுள்ளவர்களுக்கும் பொருந்தும்.
முக்கிய தகவல்:
பணியாளர்கள் மாத சம்பளம் ₹1 லட்சம் வரை இருக்கும்போது இந்த சலுகை கிடைக்கும்.
இந்தத் திட்டம் மூன்று தவணைகளில் ₹3,000 வரை மத்திய அரசு பங்களிக்க வாய்ப்பு உள்ளது.
முற்றிலும் பார்க்கும் பொழுது, மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு நம்பிக்கையையும் நிதி பாதுகாப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளது. இருப்பினும், 2023-24 வட்டியை இன்னும் பெறாத உறுப்பினர்கள் விரைவில் அதையும் எதிர்பார்க்கலாம்.

















