தமிழ்நாடு
பிளே ஸ்டோரில் லோன் செயலிகள்: காவல்துறை எச்சரிக்கை.

ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் பெறவேண்டாம் என்றும் ப்ளே ஸ்டோர் செயலி மூலம் கடன் பெற்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் இரைம் மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லோன் ஆப் செயலிகள் மூலம் மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின் தொந்தரவு செய்யும் மோசடி கும்பலை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் லோன் செயலிகளை கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இத்தகைய தவிர தடுப்பு நடவடிக்கைகளால் குறைந்திருந்த லோன் செயலிகள்
தற்போது மீண்டும் பிளே ஸ்டோர் மற்றும் வெப்சைட்டுகளில் பரவலாக அதிகரித்து வருஇறது.
லோன் செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது கடன் பெறுபவருடைய செல்போனில் இருக்கும், கான்டக்ட் எண்கள், போட்டோ, தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக்கொள்ளும்.
கடன் வாங்கும் தொகையில் ஏறக்குறைய 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் பீஸ் ஆக பிடித்துக்கொண்டு மீதமுள்ள பணம் லோன் வாங்குபவரின் வங்இ கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
இந்த பணத்தை திருப்பி கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ரூ.5000/-த்தையும் உதாரணஇிற்கு ரூ5,,000/- லோன் அப்ளை செய்யும் பட்சத்தில் ரூ.3500/- மட்டுமே லோன் பெறுபவருக்கு இடைக்கும். ரூ.1500/- பிராசஸிங் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும்.
திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200/- முதல் ரூ.500/- வரை வட்டி ஏறிக் கொண்டேசெல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர துவங்கும். மேலும் லோன் பெறுவோரின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்த்களை மோசடி கும்பல் அனுப்புகிறது. இதனால் இவ்வாறு லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், வேலையிடங்களிலும், உறவினர்களிடத்துலும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாவதுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது, எனவே பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகளில் கடன்/ லோன் பெற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














