Connect with us

தமிழ்நாடு

6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்.. தூக்கத்தில் இருக்கும் போராளிகள்!

Published

on

கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை- சேலம் இடையே நான்கு வழி சாலை திட்டம் அமல்படுத்த முயற்சி செய்தபோது வெகுண்டெழுந்த போராளிகள் தற்போது அதே சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை – சேலம் சாலையை அடுத்து தற்போது ஈசிஆர் சாலை ஆறு வழிச்சாலை ஆக மாற்ற தமிழக நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. ஈசிஆர் சாலைகளின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்தில் 6 வழிச் சாலையாக தரம் உயர்த்தும் பணியைத் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.1834 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் புதுச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிசாலைக்கு ரூ.6845 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சாலையை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விளைநிலங்களை அழித்து எங்களுக்கு சாலை தேவை இல்லை என்று கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அனைவரும் தற்போது அமைதியாக உள்ளனர் என்பதும் எந்தவித போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?