Connect with us

கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஒரு அணி; ஆசிய கோப்பைக்கு ஒரு அணி; பிசிசிஐ-யின் பலே திட்டம்

Published

on

வரும் ஜூன் மாதம் கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதே காலக்கட்டத்தில் ஆசிய கோப்பைத் தொடரும் நடத்தப்படலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியால், ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிகிறது. இதைச் சமாளிக்க ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாம் பிசிசிஐ.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் எப்படி விளையாட முடியும் என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.

மேலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் இந்திய அணி இங்கிலாந்திலே தங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் தள்ளி வைக்கப்படுமா அல்லது ஐசிசியிடம் அனுமதி பெற்று மாற்று அணியை அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் குழுவினர் பிசிசிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?