Connect with us

இந்தியா

கிரிக்கெட் வீரர்கள் மாடு, பன்றி இறைச்சி உண்ணக்கூடாதா? பிசிசிஐ விளக்கம்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்த உணவை உண்ண வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட உரிமை என்றும் அந்த உரிமையில் பிசிசிஐ தலையிடுவது தேவையில்லாத விஷயம் என்றும் பல ஊடகங்கள் கருத்து தெரிவித்தன என்பதும், சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த செய்திக்கு பிசிசிஐ விளக்கம் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் வீரர்களின் உணவு விஷயத்தில் பிசிசிஐ எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி மற்றும் மற்ற இறைச்சியை சாப்பிடுவது தொடர்பான விஷயத்தில் பிசிசிஐ எந்த பங்கும் வகிக்கவில்லை என்றும் இதுகுறித்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அது குறித்து எந்தவிதமான நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?