Connect with us

கிரிக்கெட்

IPL- மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சியை ஆரம்பித்தார் சச்சின் மகன்!

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை 20 லட்ச ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதுவரை உள்ளூர் போட்டிகளிலும், முதல் தர டி20 போட்டிகளிலும் அர்ஜுன் பெரிய அளவு சாதிக்காத நிலையில், அவருக்கு இவ்வளவு பெரிய விலை கொடுத்துள்ளது சர்ச்சையாகி வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனா, ‘அர்ஜுனை நாங்கள் அவரின் திறமையின் அடிப்படையில் மட்டும் தான் எடுத்தோமே தவிர, வேறு எந்தக் காரணங்களும் கிடையாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இப்படியான சூழலில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது பயிற்சியை முதல் முறையாக ஆரம்பித்துள்ளார். இந்த சீசனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அர்ஜுன் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?