உலகம்
தடுப்பூசியை விட இயற்கையான தடுப்பாற்றலால் அதிக பலன்: ஆய்வு முடிவின் தகவல்!

தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றல் மிகவும் அதிகம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தடுப்பூசி கொடுப்பதால் ஏற்படும் தடுப்பாற்றல் குறித்தும் இயற்கையாகவே கிடைக்கும் தடுப்பாற்றல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் தடுப்பூசியால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றலால் தான் ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது தெரிய வருகிறது இந்த ஆய்வு முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை அளித்தாலும் இது அனைவருக்கும் பொருந்தாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸிலிருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழி என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என்றும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தடுப்பூசி போடாமல் இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றல் மூலம் மனிதர்கள் தங்களை காத்துக் கொண்டால் அது நிரந்தரமான தீர்வு என்றும் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















