Connect with us

வணிகம்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 57% அதிகரிப்பு!

Published

on

airtel

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தங்களது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயிலிருந்து 57 சதவீதம் அதிகரித்து 155 ரூபாயாக அறிவித்துள்ளது.

இந்த கட்டணம் உயர்வு முதல் கட்டமாக ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும் சோதனை ஓட்டமாக அமலுக்கு வந்தது.

99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு அழைப்பு மேற்கொண்டால் நொடிக்கு 2.5 பைசா கட்டணமும், 200 எம்பி இணையதள தரவும் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இப்போது இதனை 155 ரூபாயாக அதிகரித்த பிறகு, 1 ஜிபி இணையதள தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 இலவச எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்பட உள்ளது.

விரைவில் இந்த 155 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் மற்றும் இரண்டாவது எண்ணாக ஏர்டெல்லை பயன்படுத்தி வந்தவர்களுக்கு 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மிகப் பெரிய அளவில் உதவி வந்தது.

தற்போது ஏர்டெல்லுக்கு ஒரு பயனரிடம் இருந்து வரும் சராசரி வருவாய் 190 ரூபாயாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த கட்டணம் உயர்வால் ஏர்டெல் வருவாய் 205 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு ஏர்டெல்லில் 28.4 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். 2022-ம் ஆண்டு அதுவே 32.6 கோடியாக அதிகரித்துள்ளது.

போட்டி நிறுவனமான ஜியோவில் 42.23 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். ஒரு பயனரிடம் இருந்து வரும் சராசரி வருவாய் 177.2 ரூபாயாக உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?