தமிழ்நாடு
அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

சென்னை: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு கட்சிக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்ல கூடாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அவர்தான் இத்தனை ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றி வைத்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு குறைவின்றி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. திருச்சி மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்பு துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை. தமிழகத்திற்கு பாஜக நிறைய நலத்திட்டங்கள் கொண்டு வருகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



















