Connect with us

சினிமா

ஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…

Published

on

ஆதித்ய வர்மா… வழக்கமான காதல்… வழக்கமான காதல் கதையா அல்லது இது ஏதும் ஸ்பெஷல் இருக்கிறதா என்றால் அதை தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்…

மங்களூரு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் ஆதித்ய வர்மா (துருவ் விக்ரம்)… அங்கு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சேர்கிறார் மீரா… மீரா ஷெட்டி (பணிதா சாந்து)… ஆமா… அப்படித்தான் அவங்களைக் கூப்பிடணும்… அவங்களும் அப்படித்தான் சொல்லுவாங்க… மீராவை பார்த்ததும் அதித்யாவுக்கு காதல் வருகிறது. முதல் நாளே முத்தமிடுகிறான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள். அடுத்தநாளில் இருந்து இருவரும் திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள்… இந்த திகட்டாத காதல் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ஆதித்ய வர்மாவின் மீதிக் கதை… (கதை புதுசு மாதிரி இருக்குல…)

ஏற்கனவே பாலாவால் வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, படம் முடிவடைந்த நிலையில், அதில் திருப்தி இல்லாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. பிறகு, அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஷாயாவை இயக்குநராக வைத்து மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது ஆதித்ய வர்மா…

2017ம் ஆண்டு அர்ஜூன் ரெட்டியாக தெலுங்குவில் வெளியாகி பெரும்பாலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் தற்போது தமிழில் அப்படியே வெளியாகி இருக்கிறது. அதில் அர்ஜூன் இதய அறுவைச்சிகிச்சை மருத்துவர்… இதில் ஆதித்யா எழும்பு முறிவு மருத்துவர்… இந்த மருவை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை…

பார்த்ததும் காதல்… விரும்பம் இன்றி பெண்ணை நெருங்குவது… அவரது உணர்வுகள், உணர்ச்சிகள் என எதற்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய உணர்வுகள், உணர்ச்சிகள் என்று இருப்பது, முட்டாள் தனமான கோவம், எதையும் நின்று நிதானமாக யோசிக்காத ஒருவன், எப்போதும் குடி, பெண்கள் தொடர்பு, போதை பொருட்கள் என எடுத்துக்கொள்பவன். ஆனால், நன்றாக படிப்பவன், அழகாக இருக்கிறான், நிறைய பணம் வைத்திருப்பவன். இப்படி ஒரு கதாபாத்திரம் எப்படி சாத்தியம். அதை ஒரு பெண் ஏற்றுக்கொண்டு முழுவதும் அவனை சார்ந்தே இருப்பதாக அடி வாங்கிக் கொண்டு… முத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டு, தன்னுடைய சூழலை விளக்க ஆறு மணி நேரம் மட்டுமே கொடுக்கும் ஒருவனுடைய குழந்தையை திருமணத்திற்கு முன்னரே சுமக்கும் ஒரு பெண்ணும் எப்படி சாத்தியம் என்ற மிகப்பெரிய கேள்வி அர்ஜூன் ரெட்டி படத்தைப் பற்றி என்னிடம் யார் எப்போது பேசினாலும் எனக்கு இருக்கும்… அதே கேள்வி இந்தப் படத்தைப் பார்க்கும்போது வந்தது. அதே கதை தானே இதுவும்…

ஒருவேளை 20, 21ம் நூற்றாண்டுகளின் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கேள்விக்கு விடை தெரியுமோ என்னமோ… வயது ஆகிவிட்டது.

படமாக முதல் பாதி ஓரளவு பொறுத்துக்கொண்டு பார்க்கலாம். ஆனால், இரண்டாம் பாதி மிகப்பெரிய இழுவை… முழுவதும் மது பாட்டில்கள்தான். சிரமங்களுக்கு இடையேதான் பார்க்க வேண்டி இருக்கிறது. சிலர் இடையிலே எழுந்தும் போனார்கள்… பாவம் 70களின் குழந்தைகளாக இருப்பார்கள் போல… நான் 80ன் குழந்தை என்பதால் கொஞ்சம் பொறுத்துகொள்ள முடிந்ததோ இல்லையோ…

துருவ் விக்ரம்… துரு… துரு… என இருக்கிறார்… சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக ரசிகைகளுக்கு ஒரு நல்ல வரவுதான். நடிப்பிலும் உண்மையில் நன்றாக நடித்திருக்கிறார். குரல், நடை, உடல் பாவனையில் சில இடங்களில் விக்ரமை ஞாபகம் படுத்துகிறார்.

பணிதா சாந்து வடக்கே இருந்து மற்றொரு அழகான இறக்குமதி… வருகிறார்… அழுகிறார்… முத்தம் கொடுக்கிறார்… கற்பமாகிறார்… கடைசியில்… (நோ அது சஸ்பென்ஸ்)… 20 வருடங்கள் கழித்து கடலோரக் கவிதைகள் ராஜா மீண்டும் சினிமாவில் எண்ட்ரி ஆகியிருக்கிறார்…

ஸ்மைல் சேட்டையின் அன்பு தாசன்… அதித்யாவின் நண்பராக வருகிறார்… அவரது சில கமெண்ட்ஸ் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாகவும் நடித்துள்ளார். வேறு யாரையும் பெரிதாக சொல்லிக்கொள்ள முடியவில்லை…

பாடல்களைவிட பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. அதுவும் நாய் சத்தமாக குறைந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பின்னணி  இசை நாயகனுக்கு கொடுத்திருக்கிறார் ரத்தான்… கேட்க நன்றாக இருந்தது…

நிறைய ஆங்கில வசனங்கள்… நலன் குமாரசாமி வேறு எழுதியிருக்கிறார். அதிகமான பண வாடை… எதார்த்தத்திற்கு சற்றும் பொறுந்தாத குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்க்கை… அங்கும் ஜாதிய வேறுபாடு… என இருக்கும் இந்தக் கதை வேண்டுமானால் இதே வாழ்க்கை வாழும் .1% மக்களுக்குக்கும் .1% 20களின் குழந்தைகளுக்கும் பிடிக்கலாம்… மற்ற 99.98% மக்களுக்கு… கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்…

எதிர்காலம் இருக்கிறது… துருவ்… காத்திருக்கிறோம் இன்னும் கொண்டாட…

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?