சினிமா
முதல் காட்சி முடிந்தவுடன் வைரலாகும் நெகட்டிவ் விமர்சனங்கள்: ‘பீஸ்ட்’ படம் எப்படி இருக்கு?

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வருவதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
ராஜஸ்தானில் குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையைவிட்டு பறக்க, அந்த பலூனை விஜய் எடுத்துக் கொடுக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. அப்போது திடீரென ஏற்படும் பயங்கரவாத தாக்குதலில் பறந்து பறந்து விஜய் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்கிறார். அப்போது எந்த குழந்தைக்கு பலூன் எடுத்து கொடுத்தாரோ அந்த குழந்தை எதிர்பாராமல் இறந்து விடுகிறது. இதனால் விரக்தி அடையும் விஜய் ‘ரா’வில் இருந்து வெளியேறுகிறார்.
அதன் பிறகு சென்னை வந்து விடிவி கணேஷ் நடத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு பூஜா, ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலரும் பணிபுரிய படம் காமெடியாக செல்கிறது. இந்த நேரத்தில் விஜய் உள்பட அவரது நிறுவனத்தில் உள்ள அனைவரும் மால் ஒன்றுக்கு செல்ல அந்த மாலை பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர்.
தங்கள் தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே பணய கைதியாக இருப்பவர்களை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் தரப்பில் கோரிக்கை வைக்க, செல்வராகவன் அமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசனை செய்கிறார். அப்போது விஜய் தனி ஆளாக அந்த பயங்கரவாதிகளை தீர்த்துக்கட்டி ஹைஜாக் பண்ணப்பட்ட பணயக்கைதிகள் அனைவரையும் எப்படி விடுவிக்கின்றார் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.
‘பீஸ்ட்’ படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அனிருத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவாளரின் அபாரமான கேமரா கோணங்கள்> மற்றபடி படத்தில் வேறு எதுவுமே இல்லை. இயக்குனர் நெல்சன் படங்களில் இருக்கும் காமெடி ஆங்காங்கே இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது .
படுவீக்கான வில்லன் கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். ஷைன் சாக்கோ கேரக்டர் டுவிஸ்ட்டாக திடீரென மாறினாலும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் போக்கிரி படத்தை பார்த்தமாதிரி ஆங்காங்கே காட்சிகளும் உள்ளன. மொத்தத்தில் அனிருத்தின் பின்னணி இசை மற்றும் கேமரா ஆகிய இரண்டைத் தவிர இந்த படம் முழுக்க முழுக்க தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
























