வணிகம்
தங்க நகை கடனுக்கான புதிய விதிகள் – கிராமுக்கு எவ்வளவு கடன்?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தங்க நகை கடனுக்கான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக அவசரத் தேவைக்காக தங்கத்தை அடகுவைப்பவர்கள், சில புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:
✅ தங்கத்தின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்க வேண்டும்
முன்னதாக 90% வரை வழங்கப்பட்ட நிலையில், இப்போது இந்த வரம்பு மக்கள் மீதான கடன் அளவை குறைக்கும்.
✅ அடகுவைக்கும் நகைக்கு உரிய ரசீது கட்டாயம்
பழைய நகைகளுக்கு ரசீது இல்லாமல் கடன் பெறுவது சிரமமாகும்.
✅ நகையின் புகைப்படம், சான்றிதழ், எடை, கற்கள், தூய்மை ஆகிய விவரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்
நகை திரும்ப பெறும் போது பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தடுக்க இந்த நடைமுறை.
✅ வெள்ளி நகைகளுக்கும் கடன் பெற முடியும்
925 தூய்மையுடன் இருக்கும் வெள்ளி நாணயங்கள் மட்டும் கடனுக்குத் தகுதியானவை.
✅ ஒரு நபருக்கு அதிகபட்சம் ஒரு கிலோ தங்கம் வரை மட்டுமே கடன் வழங்கலாம்
இது தனிநபர்களின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் முக்கிய விதி.
பொதுமக்களுக்கு தாக்கம்:
அவசரத் தேவைகளுக்கு விரைவாக பணம் பெறும் வாய்ப்பு குறையும்
வர்த்தக நோக்கில் தங்கம் அடகுவைக்கும் நபர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம்
விதிகள் கடுமையாக இருப்பதால் வங்கிகளில் கடன் செயல்முறை மெதுவாகலாம்

















