Connect with us

ஜோதிடம்

யப்பா டேய்..வாங்குன பணத்தை திருப்பிக் கொடுடா.. என்று கேட்பவரா நீங்கள்..

Published

on

இப்பொழுதெல்லாம் நம்ம கிட்ட  பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்த நாம் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். நாமும் பரிதாபப்பட்டு கொடுத்து விடுவோம்.  ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்‌. வடிவேலு பட ஜோக் மாதிரி பணத்தை எப்படா திருப்பித் தருவே? என்று கேட்டால் பணம் வரும்போது திருப்பித் தருவேன் என்பார்கள். எப்படா வரும் என்று கேட்டால் உனக்கு கொடுக்கும்போது வரும் என்பார்கள்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப ராமாயணத்தில் கம்பர் கூறியிருப்பார். ஏனென்றால் கடன் வாங்குவது அவ்வளவு கொடுமையாகக் கருதப்பட்ட காலம் அது. ஆனால் இப்போது கம்பன் இருந்தால் கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்றுதான் பாடியிருப்பான். கொடுத்த கடனை வாங்குவது அவ்வளவு பெரும்பாடாக இருக்கிறது. அதிலும் சில பேர் கந்து வட்டி கேட்கிறான் என்று காவல் நிலையத்தில் நம் மீதே புகாரும் கொடுத்து விடுவார்கள். இன்னும் சில பேர் கடன் கொடுத்தவன் பேரை சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்கள்.

இப்படி பணத்தை மற்றவர்களிடத்தில் கொடுத்து ஏமாந்து நிற்பவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப பெற என்ன செய்வது என்பதே பெரிய மண்டைக் குடைச்சலாக போகிறது பல நேரங்களில்.

இப்படிப்பட்ட நபர்கள் ஆண்டவன் மேல் பாரத்தை இறக்கி வைத்து செய்ய வேண்டிய எளிய பரிகார முறை என்ன என்பது  பற்றி இப்போது  பார்க்கலாமா…  இந்த பரிகாரத்தை செய்ய  நமக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் வேண்டும் சுத்தமான தயிர் கருப்பு உளுந்து அனைத்தும் தேவைப்படும். வெள்ளிக்கிழமை இரவு பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் கருப்பு உளுந்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தயிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை  குளித்து முடித்த பிறகு ஊற வைத்துள்ள கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர் பகுதியில் கொட்ட வேண்டும். பரிகாரத்தை செய்ய தொடங்கியதிலிருந்து பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்  கொண்டே செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முதலில் அமாவாசை அன்றுதான் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தொடங்கி அதன் பிறகு வரக்கூடிய 8 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை விடாமல் செய்ய வேண்டும். அரச மரத்தில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. சனிக்கிழமை அன்று பெருமா‌ளும் மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சனிக்கிழமையில் இந்த அரச மர பரிகாரம் செய்வது மிகவும் நல்லது என கருதப்படுகிறது. பணம் வாங்கியவர்கள் திரும்பி தரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட அதை திருப்பி தருவதற்கான சூழ்நிலையை இந்த பரிகாரம் அமைத்து தரும். ஆகையால் பணத்தை கொடுத்து விட்டு திரும்ப பெறுவதற்கு சிரமமாக இருந்தால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து அதற்கான பலனை பெற்றுக் கொள்ளுங்கள் அத்தோடு இனிமேல் இது போல பணத்தை கொடுத்து விட்டு பரிதவிக்காமல் இருக்க ஒன்றுக்கு பலமுறை யோசனை செய்து அதற்கு ஜவாப்தாரியாக அதாவது அடமானமாக வேறு ஏதாவது பொருளோ தங்கமோ நிலப் பத்திரமோ டபெற்றுக் கொண்டு கடன் கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஊரில் நீங்கள் ஒரு  வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி அதற்கு தலைவராக வேண்டியும் வரலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா7 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா7 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

வணிகம்5 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

Translate »
Fatma kristina : aluguel de gulet com 5 cabines e 10 passageiros para fretamento em bodrum | yachttogo. ு?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.