Connect with us

உலகம்

சீனாவில் ஒரே நாளில் 255 பேர் கொரோனாவுக்கு பலி: நான்காம் அலையா?

Published

on

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா உள்பட உலக நாடுகளில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து மீண்டும் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் உள்ள வட கிழக்கு நகரங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீனாவில் 4ஆம் அலை தொடங்கிவிட்டதா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் வடகிழக்கு நகரங்களில் மட்டும் 255 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இதனை அடுத்து அந்த பகுதிகளில் தீவிர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,494 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?