பங்கு சந்தை
ஒரே நாளில் 8% உயர்ந்த சுஸ்லான் எனர்ஜி பங்கு – முதலீட்டுக்கு இதுவே சரியான நேரமா?

இன்று பங்குச்சந்தையில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 8% இற்கு மேல் உயர்வு கண்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20% அளவிற்கு உயர்வடைந்துள்ள இந்த பங்கு, மார்ச் மாதத்தில் 14% ஏற்றம் பெற்றிருந்தது. ஏப்ரல் மாதம் இன்றுவரை 4% உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 21, திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு ரூ.55.08 இலிருந்து தொடங்கி ரூ.59.70 வரை உயர்ந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் தருணத்தில், பங்கு விலை 8.81% உயர்ந்து ரூ.59.92 ஆக இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.37.95 என்ற 52 வார குறைந்த விலையிலிருந்து, செப்டம்பர் மாதத்தில் ரூ.86.04 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு முழுவதும் 51% இற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
சமீபத்தில் சுஸ்லான், சன்ஷூர் எனர்ஜியிடமிருந்து 100.8 மெகாவாட் EPC காற்றாலை மின்சார திட்ட ஆர்டரை பெற்றுள்ளதாக அறிவித்தது. இது மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படவுள்ள திட்டமாகும்.
முதலீட்டாளர்களின் பங்கு வைத்தும் உயர்ந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த காலாண்டில் 24.49% வைத்திருந்ததை 25.12% ஆக அதிகரித்துள்ளனர். FPIகளும் 23% பங்கு வைத்துள்ளனர்.
சாய்ஸ் புரோக்கிங் நிபுணர் ஹார்டிக் மடலியா கூறுகையில், பங்கு தற்போதைய விலை நிலை (RSI) 60.80 ஆக இருப்பதன் அடிப்படையில் இது ஒரு நிலையான ஏற்ற நிலையை காண்பிக்கிறது என்றும், பங்கு ரூ.62 வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.














