பங்கு சந்தை
புதிய உச்சத்தைத் தொட்ட ஐசிஐசிஐ வங்கி பங்கு – இப்போது விற்கலாமா? ஹோல்ட் செய்யலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்கள் கணிப்பில் ஐசிஐசிஐ வங்கி பங்கு வளர்ச்சி தொடரும்!
2025-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை விட மேம்பட்ட நிலையில் வெளியானதையடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை ரூ.1,437 என்ற புதிய உச்சத்தை இன்று தொடக்க வர்த்தக அமர்விலேயே தொட்டது.
இதன் முந்தைய முடிவு ரூ.1,406.65 இருந்த நிலையில், 2% உயர்வுடன் பங்கு விலை இம்முறையிலேயே அதிகபட்சம் அடைந்தது. காலை 9:45 மணியளவில் பங்கு விலை ரூ.1,417.75 ஆகக் காட்சியளித்தது.
பங்கு விலை வளர்ச்சி & காலாண்டு முடிவுகள்:
கடந்த 1 மாதத்தில் 12% வரை உயர்ச்சி
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5% உயர்வு
காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு தரகு நிறுவனங்கள் இலக்கு விலையை உயர்த்தியுள்ளன
தரகு நிறுவனங்களின் பரிந்துரை:
மோதிலால் ஓஸ்வால்:
பங்கு வாங்க பரிந்துரை
இலக்கு விலை: ரூ.1,650 (தற்போதைய விலையைவிட 17% அதிகம்)
நுவாமா வெல்த் மேனெஜ்மெண்ட்:
வாங்க பரிந்துரை
இலக்கு விலை ரூ.1,470 இருந்து ரூ.1,630 ஆக உயர்வு
ஜேஎம் ஃபைனான்சியல்:
பங்குகளை வாங்கலாம்
இலக்கு விலை ரூ.1,500 இருந்து ரூ.1,650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இப்போது என்ன செய்யலாம்?
தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புதிய முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் வாங்கலாம் என்பதே பொதுவான ஆலோசனை.
இப்போதைய வர்த்தக நிலை:
பங்கு 0.59% உயர்வுடன் ரூ.1,415 ஆகவும் வர்த்தகமாகிறது.














