Connect with us

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்… பொங்கிய எழுந்த கதக் நடனக்கலைஞர்கள்!

Published

on

பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து கதக் நடன கலைஞர்கள் பொங்கி எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது மட்டுமின்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனை அடுத்து இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

அவர் நீதிமன்றத்தில் தான் அந்த பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்து கொண்டு தான் மீது பழி போடுவதாகவும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. அது மட்டும் என்று அந்த பெண் ஒரு கதக் நடன கலைஞர் என்றும் ஒரு கதக் நடனக்கலைஞருக்கு சிறுநீர் பிரச்சனை இருக்கும் என்றும் அவர் தெரிவித்ததுதான் தற்போது கதக் நடன கலைஞர்களை பொங்கி எழ வைத்துள்ளது.

இது ஒட்டுமொத்த கதக் நடன கலைஞர்களை அவமானப்படுத்தும் கூற்று என்றும் முட்டாள்தனமான அபத்தமான கருத்து என்றும் கதக் நடன கலைஞர் ஷோபனா நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கும் கதக் நடனம் ஆடுவதற்கும் என்ன எந்த தொடர்பும் இல்லை என்றும் இது போன்ற முட்டாள்தனமான ஆதாரமற்ற வாதத்தை நீதிமன்றத்தில் எப்படி வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு பெண் தனக்கு தானே சிறுநீர் கழித்து கொண்டால் அது இருக்கையில் மட்டும் தான் அந்த சிறுநீர் கழிக்க முடியும் என்றும் உடல் முழுவதும் எப்படி ஒரு பெண்ணால் சிறுநீர் கழிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டுகளாக கதக் நடன பயிற்சி செய்து வரும் மனிஷா என்பவர் இது குறித்து கூறியதாவது கதக் நடன கலைஞர்களுக்கு இடுப்பு பகுதி பயன்பாடு அதிகம் இருக்கும் என்றும் அதனால் மையப்பகுதி வலுவடைகிறது என்றும் ஆனால் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர் என்று யார் கூறினாலும் அது தவறானது மற்றும் அபத்தமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சங்கர் மிஸ்ரா மீது கதக் நடன கலைஞர்கள் தனியாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருப்பதாக கூறப்படுவதால் இந்த விவகாரம் மேலும் பெரிய பிரச்சனையாகும் என தெரிகிறது.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!