Connect with us

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்… பொங்கிய எழுந்த கதக் நடனக்கலைஞர்கள்!

Published

on

பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து கதக் நடன கலைஞர்கள் பொங்கி எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது மட்டுமின்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனை அடுத்து இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

அவர் நீதிமன்றத்தில் தான் அந்த பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்து கொண்டு தான் மீது பழி போடுவதாகவும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. அது மட்டும் என்று அந்த பெண் ஒரு கதக் நடன கலைஞர் என்றும் ஒரு கதக் நடனக்கலைஞருக்கு சிறுநீர் பிரச்சனை இருக்கும் என்றும் அவர் தெரிவித்ததுதான் தற்போது கதக் நடன கலைஞர்களை பொங்கி எழ வைத்துள்ளது.

இது ஒட்டுமொத்த கதக் நடன கலைஞர்களை அவமானப்படுத்தும் கூற்று என்றும் முட்டாள்தனமான அபத்தமான கருத்து என்றும் கதக் நடன கலைஞர் ஷோபனா நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கும் கதக் நடனம் ஆடுவதற்கும் என்ன எந்த தொடர்பும் இல்லை என்றும் இது போன்ற முட்டாள்தனமான ஆதாரமற்ற வாதத்தை நீதிமன்றத்தில் எப்படி வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு பெண் தனக்கு தானே சிறுநீர் கழித்து கொண்டால் அது இருக்கையில் மட்டும் தான் அந்த சிறுநீர் கழிக்க முடியும் என்றும் உடல் முழுவதும் எப்படி ஒரு பெண்ணால் சிறுநீர் கழிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டுகளாக கதக் நடன பயிற்சி செய்து வரும் மனிஷா என்பவர் இது குறித்து கூறியதாவது கதக் நடன கலைஞர்களுக்கு இடுப்பு பகுதி பயன்பாடு அதிகம் இருக்கும் என்றும் அதனால் மையப்பகுதி வலுவடைகிறது என்றும் ஆனால் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர் என்று யார் கூறினாலும் அது தவறானது மற்றும் அபத்தமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சங்கர் மிஸ்ரா மீது கதக் நடன கலைஞர்கள் தனியாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருப்பதாக கூறப்படுவதால் இந்த விவகாரம் மேலும் பெரிய பிரச்சனையாகும் என தெரிகிறது.

கிரிக்கெட்6 mins ago

ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி!

வேலைவாய்ப்பு1 hour ago

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

kamal
சினிமா2 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா2 hours ago

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

தினபலன்2 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (02/04/2023)!

வணிகம்2 hours ago

இன்று தங்கம் விலை (02/04/2023)!

சினிமா2 hours ago

’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!

சினிமா செய்திகள்10 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்11 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்11 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!