Connect with us

இந்தியா

நான் சொன்னதை செய்தால் ரூ.80 லட்சம்.. பெண் விமான பயணியிடம் கோரிக்கை வைத்த கோடீஸ்வரர்..!

Published

on

By

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான பயணத்தின் போது பல வினோதமான நிகழ்வுகள் நடந்து வருகிறது என்பதும் அப்படி ஒரு வினோதமான அனுபவத்தை தான் விமான பயணி சமீபத்தில் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஸ்டீவ் என்பவர் அந்த பெண்ணிடம் உங்கள் மாஸ்க்கை கழட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த பெண் தனது மாஸ்க்கை கழட்ட முன்வரவில்லை. இதனை அடுத்து ஸ்டீவ் ரூ.80 லட்சம் தருகிறேன், உங்கள் மாஸ்க்கை கழட்டுங்கள் என்று கூறியதும் அந்த மனிதரின் வினோதமான கோரிக்கையை கேட்டு அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார், மேலும் அவருக்கு சிறிது பயமும் அவருக்கு ஏற்பட்டது.

தொழிலதிபர் ஸ்டீவ், மீண்டும் அந்த பெண்ணிடம் மாஸ்கை கழட்டும்படி கேட்டுக் கொண்டபோதிலும் அந்த பெண் மாஸ்க்கை கழட்டவில்லை என்றும் அவரது 80 லட்சம் வாய்ப்பையும் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் விமானத்தில் காலை உணவு பரிமாறப்பட்டபோது மாஸ்க்கை அகற்றியதாக ஸ்டீவ் கூறியுள்ளார்.

இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியபோது பலர் தங்களது டுவிட்டின் மூலம் கோபமடைந்துள்ளனர். இது ஒரு அராஜகமான நடத்தை என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பல பயனர்கள் தெரிவித்தனார். ஒரு சிலர் ஒரு பெண்ணின் மாஸ்க்கை அகற்றக் கூறுவதற்கு இவ்வளவு பெரிய தொகை கொடுப்பது விசித்திரமாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். விமான பயணத்தின் போது ஒரு பெண்ணுக்கு இதுபோன்று பணம் கொடுக்கும் நடைமுறை இந்தியாவில் உள்ளதா என்றும் பலர் எழுதியுள்ளனர். ஒரு சில பயனர்கள் அந்த பெண் அந்த ஆஃபரை பெற்று இருக்கலாம் என்றும் மாஸ்கை கழற்றிவிட்டு ரூ.80 லட்சம் பெற்று இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே அவர் சக பயணி ஒருவரிடம் மாஸ்க்கை கழட்டினால் ரூபாய் 8 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோடீஸ்வரர் தான் கொரோனா வைரஸ் தொற்றின் போது தடுப்பூசி மற்றும் மாஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்தார் என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்10 hours ago

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

kamal
சினிமா செய்திகள்10 hours ago

மணிரத்னம் மீது பொறாமையாக உள்ளது: கமல்ஹாசன்

உலகம்10 hours ago

விவாகரத்து செய்த உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. மனைவிக்கு இழப்பீடாக $1 பில்லியன்..!

வேலைவாய்ப்பு10 hours ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 hours ago

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Dasara Movie Review image
விமர்சனம்10 hours ago

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

இந்தியா11 hours ago

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

சினிமா11 hours ago

”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சினிமா11 hours ago

பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!

தமிழ்நாடு12 hours ago

கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேலைவாய்ப்பு2 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு7 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

வேலைவாய்ப்பு6 days ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!