Connect with us

தமிழ்நாடு

இன்னொரு உயிர் பலி: நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை!

Published

on

நேற்று முன்தினம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் முக ஸ்டால்லின் உள்பட பலர் அந்த மாணவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்த மாணவரின் பெற்றோருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் நிதி உதவி செய்தாலும் 19 வயது மகனை பறிகொடுத்த அந்த பெற்றோர்கள் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார்கள் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நீட்தேர்வுக்கு பின்னர் இன்னொரு உயிர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி என்ற பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய பின்னர் மாணவி கனிமொழி மிகவும் சோர்வாக இருந்ததாகவும் இதனை அடுத்து தேர்வு முடிவு பயம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

நீட் தேர்வால் இன்னொரு உயிர் பலியாகி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?