Connect with us

சினிமா

ரஜினிக்குப் பதிலடி கொடுக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்?

Published

on

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தட்டிக் கழித்ததால் பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ‘டான்’ பட இயக்குநர்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ’டான்’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதாகத் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அறிமுகப் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் என இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தனர்.

அவரது அடுத்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு இருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிபி கதை சொல்லி இருக்கிறார், அவரை இயக்கப் போகிறார், லைகா புரொடக்‌ஷன் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது என்ற பேச்சுகள் எழுந்தது. ஆனால், சிபி சக்ரவர்த்தியிடம் கதைக் கேட்ட ரஜினி தரப்பு அவரிடம் சம்மதம் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. பிறகு ‘கதை திருப்தியில்லை’ என்று சொல்லி அவரை ஓரங்கட்டி விட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அப்செட்டில் இருக்கிறார்.

இதனால், அடுத்து உருவாக்கி வரும் கதையில் நடிகர் சிவகார்த்திகேயனையே மீண்டும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் சிபி தரப்பு இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?