சினிமா

ரஜினிக்குப் பதிலடி கொடுக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்?

Published

on

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தட்டிக் கழித்ததால் பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ‘டான்’ பட இயக்குநர்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ’டான்’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதாகத் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அறிமுகப் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் என இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தனர்.

அவரது அடுத்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு இருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிபி கதை சொல்லி இருக்கிறார், அவரை இயக்கப் போகிறார், லைகா புரொடக்‌ஷன் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது என்ற பேச்சுகள் எழுந்தது. ஆனால், சிபி சக்ரவர்த்தியிடம் கதைக் கேட்ட ரஜினி தரப்பு அவரிடம் சம்மதம் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. பிறகு ‘கதை திருப்தியில்லை’ என்று சொல்லி அவரை ஓரங்கட்டி விட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அப்செட்டில் இருக்கிறார்.

இதனால், அடுத்து உருவாக்கி வரும் கதையில் நடிகர் சிவகார்த்திகேயனையே மீண்டும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் சிபி தரப்பு இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Trending

Exit mobile version